Loading...
13 வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு – பாணந்துறையில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேக நபரான ஆசிரியர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அது குறித்து வகுப்பு முடிந்ததும் நடந்த சம்பவத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறியதையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading...
இதனையடுத்து சந்தேகநபரான ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































