பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி பூங்காவில் 8 வயது சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள யாருமில்லாத வீட்டிற்குள் விளையாட அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களின் பேச்சைக் கேட்டு சிறுமியும் விளையாட்டுத்தனமாக அவர்களுடன் விளையாட சென்றுள்ளார். காலியான வீட்டிற்கு சென்றதும் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் இந்த இரண்டு சிறுவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே மிகவும் கொடூரமாக அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். அதன்பின் அந்த இரண்டு சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமையால் சிறுமியின் பிறப்பு உறுப்பு மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனால் அந்த சிறுமியை அழுதபடியே வீட்டிற்கு சென்று தனது அம்மாவிடம் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து கோபமடைந்த அந்த சிறுமியின் தாயார் சாஸ்திரி பூங்கா பகுதியில் வசித்து வரும் அந்த சிறுவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க அந்த இரண்டு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.