கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் காவல்துறையினர்; மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்திய பின்னர், இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
போராட்டக்காரர்கள், சிறுவர்களை கேடயங்களாக பயன்படுத்துவதாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் கைது நடவடிக்கைகளின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்தநிலையில் “சட்டவிரோதமான போராட்ட தளத்தில் உள்ள எவரும் கைது செய்யப்படலாம் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி பிற்பகுதியில், அமெரிக்க-கனடா எல்லையை கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் முதலில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.
இதுவே பின்னரே நாடளாவிய போராட்டமாக மாறியது. நாடாளுமன்றத்தை காவல்துறை சுற்றிவளைத்தமையால், பொதுச்சபை மற்றும் செனட் ஆகியன வெள்ளிக்கிழமையன்று தமது அமர்வுகளை ரத்து செய்தன.