அமைதியான சமுதாயத்தை உருவாக்கி உள்ளதாகவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம் என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மஹரகம அரச தலைவர் கல்லூரியில் இன்று இடம்பெற்ற “மாணவர், ஆசிரியர் மற்றும் போர்வீரர் நினைவிடம்” திறப்பு விழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ் படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் என்பவர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்கள். உங்கள் சேவையின் வெளிப்பாட்டினாலேயே சமூகத்தில் ஒழுக்க விழுமியங்கள் நிரப்பப்படுகின்றன என குறிப்பிட்டார்.
தற்போதுள்ள சூழலில் நீங்கள் அனைவரும் இந்த தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கும் சேவை செய்வீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த நினைவிடமானது நாட்டின் கொடியை உயரப் பறக்க வைக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போர் வீரர்களின் கூட்டு மற்றும் பங்களிப்பைக் குறிக்கிறது” என்றும் இதற்காக பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, போர்க்காலத்தில் நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனைத்து கஷ்டங்களையும் நினைவு கூர்ந்தார்.