ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமையான முறையில் கொண்டு நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 5-ந் தேதி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் கங்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் திருத்தேர்விழா இன்று இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தேதை வடம் பிடித்து இழுக்கிறார்கள். இதனையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கி இரவில் நடக்கும் தேர்த்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக 6 சிறப்பு பஸ்களும், கூடலூரில் இருந்து 5 சிறப்பு பஸ்களும் இயகப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தேரோட்ட நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. நடக்கிறது.