Loading...
கோட்டா கோ கம போராட்டக்கள உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான மருத்துவர் பெதும் கர்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றம் அருகே கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டு பெதும் கர்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
Loading...
நீதிமன்ற உத்தரவு
அவருக்கு பிணை பெற்றுக் கொள்ள சட்டத்தரணிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பெதும் கர்னரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...