Loading...
சிங்காரவேலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் முருகனின் அழகில் மெய்மறந்து மனமுருகி தரிசிப்பர். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
Loading...
அன்றைய தினத்தில் சிங்காரவேலவருக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். அதனை தொடர்ந்து, சிங்காரவேலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். அந்த அலங்காரத்தில் முருகனை தரிசிக்கும் பக்தர்கள் ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’.. என்ற பாடல் வரிகளுக்கேற்ப அவரின் அழகில் மெய்மறந்து முருகனை மனமுருகி தரிசிப்பர்.
Loading...








































