அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் (Archuna) ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளர். அது சிறந்த விடயம் ஆனால் அந்த விடயங்களை நிரூபிக்க தவறியுள்ளார்.
அவர் தவறாக செயல்படுவதால் தற்போது பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலை பணிப்பாளர் முரண்படுகிறார்.
அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஏற்படும்.
எதிர்வரும் காலத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்.
நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்போது தயாராகி வருகிறோம். அத்துடன் வடக்கு மாகாணத்தை சிங்கப்பூராக உயரத்துவதற்கு எம்மை போன்ற வர்த்தகர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.








































