Loading...
யாழ்ப்பாணத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ அம்பருடன்( திமிங்கலத்தின் வாந்தி) மீனவர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 58 வயதுடைய மீனவர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது வீட்டில் அம்பர் தொகையை மறைத்து வைத்துள்ள நிலையில், அதனை நீர்கொழும்பு பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
Loading...