சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் முருகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.
சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.
இந்த நன்னாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயில்களுக்கு சென்றால் குழந்தை உண்டாகும்.
சூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார். இது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி விழாவன்று ‘சூரா சம்காரம்’ இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாட வேறொரு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.
சில முனிவர்கள் உலக நன்மைக்காக புத்திரன் ஒருவன் வேண்டுமென்று கருதி ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, ஆறு நாட்கள் யாகத்தை நடத்தியிருக்கின்றனர். அந்த ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்து வெளியானதாகவும் அந்த ஆறும் இணைந்தவனே ஆறுமுகன் எனப்படும் முருகன் ஆவார். எனவே முருகன் திருச்செந்தூரில் ஜனித்த தினமே கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்
நாரத முனிவர் கயிலாய மலைக்கு சென்று சிவனிடம் தனக்கு கிடைத்த ஞானப்பழத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். தான் இதை புசிப்பதை விடவும் தன் பிள்ளைகள் இதை உண்பதே சரி என்று முடிவெடுத்த சிவபெருமான் விநாயகர் மற்றும் முருகனை அழைத்து ‘யார் முதலில் உலகத்தை மூன்று முறை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம்’ என்று ஒரு போட்டியை வைக்கிறார்.
இதைக் கேட்டவுடன் முருகன் தனது மயில்வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவருகிறார். ஆனால் விநாயகரோ சமயோசிதமாக தன் பெற்றோரே தமக்கு உலகம் என்று கூறி சிவன்-பார்வதியை மூன்று முறை வலம் வந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.
சிவ பெருமானை தரிசிக்க எல்லா முனிவர்களும், ரிஷிகளும் கயிலாயம் வந்துவிட பூமியின் எடை ஒருபக்கமாக அதிகரித்ததன் காரணமாக உலகம் சமநிலை இழந்துவிட சிவபெருமான் அகத்திய முனிவரை தென் பக்கம் சென்று சமநிலையை சரி செய்யுமாறு பணிக்கிறார்.
அகத்திய முனிவரோ இடும்பன் என்ற அரக்கனை அழைத்து தனது தோளில் இரண்டு மலைகளை சுமந்து சென்று தென்னகத்தில் வைக்குமாறு ஆணையிடுகிறார். அப்படி இடும்பன் மலைகளை கொண்டு செல்கையில் ஓரிடத்தில் அவற்றை கீழே வைத்துவிட்டு ஓய்வெடுக்கிறார்.