பாம்பு என்றால் படையே நடுங்கும்போது, சாதாரண மக்கள் நிலையை கேட்கவா வேண்டும்? வங்கி ஊழியர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. கோட் வங்கி வளர்ச்சி குறித்து அனைவரும் ஒரு ஹாலில் நின்று கொண்டு சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென ஒரு மலைப்பாம்பு மேலே இருந்து பொத்தென்று விழுந்தது. ஊழியர்களுக்கு நடுவில் வந்து விழுந்த அந்த மலைப்பாம்பு சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் உடையதாக இருந்தது.
மீட்டிங் நடுவில் பாம்பு வந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி கதறி கொண்டே ஓடினார்கள். இதனால் அந்த வங்கியே பதற்றமானது.
இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வந்து பார்த்தால் அந்த ஹாலில் பாம்பை காணவில்லை. பிறகு அங்கிருந்த சோஃபா ஒன்றிற்கு அடியில் மலைப்பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் அதை பிடிக்க முடியாமல் திணறினார். ஒரு இரும்பு கம்பியை வைத்துக் கொண்டு அதை பிடிக்க வனத்துறையினர் படாத பாடு பட்டனர்.
ஒருவழியாக லாவகமாக அந்த பாம்பை பிடித்து கொண்டு போனார்கள். அதன்பின்னர் வங்கி இயங்கினாலும் பாம்பு தங்கள் கண் முன்னால் விழுந்த ஷாக்கிலிருந்து ஊழியர்கள் நீண்ட நேரத்திற்கு மீளவே முடியவில்லை.