கடந்த 2020ம் ஆண்டை விடவும், 2021 ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் 207695 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், 2021ம் ஆண்டில் 380230 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களின் எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டில் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 73000 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் 10576 வெளிநாட்டுப் பிரஜைகள் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 4726 இந்தியர்கள் எனவும் 3576 பேர் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.








































