முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு கிபிர் விமான வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றியதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருப்பதை அங்கு வேலி அமைப்பதற்காக சென்ற நபர் இனம் காட்டியுள்ளார்.
அதை தொடர்ந்து அதனை இரும்பிற்கு விற்பதற்காக எடுத்துசெல்லமுற்பட்ட போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோகிராம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காக கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது . சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இவர்களை இன்று மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
அதேவேளை மீட்கப்பட்டுள்ள குண்டுகள் காணி யுத்தம் முடிந்த காலப்பகுதியிலிருந்து 12 வருடங்களுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதோடு அண்மையில் காணி உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்க்காக மாவட்ட செயலகத்திடம் இராணுவத்தரப்பால் ஒப்படைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.