நம் உடலில் தேவையான அளவு தண்ணீர் இருப்பது அவசியம் தான். ஆனால் உடல் எடையை குறைக்க சிலர் சூடான நீரை குடிக்கலாம். ஆனால் சூடான நீரைக் குடிப்பது சில சமயங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கும்.
காலையில் எழுந்தவுடன் தினமும் ஒரு முறை சூடான தண்ணீரைக் குடிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை சூடான நீரைக் குடித்தால் உங்களுக்கு பல பிரச்சினைளை தரலாம். அதிக சூடான நீர் குடல்களை சேதப்படுத்துகிறது. இது செரிமான சக்தியையும் பாதிக்கிறது.
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு ஒரு முறை லேசான சூடான நீரைக் குடிக்கவும். ஆனால் மீண்டும் மீண்டும் சூடான நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும். இது தவிர இரவில் சுடு நீர் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை இன்றே மாற்றவும்.
இரவில் தூங்கும் போது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உங்களுக்கு தூக்கப் பிரச்சினைகள் ஏற்படும். இரவில் சூடான நீரைக் குடிப்பதன் மூலம் நீங்கள் மீண்டும் மீண்டும் பாத்ரூம் செல்ல வேண்டியிருக்கும். இது உங்கள் இரத்த நாள செல்கள் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.








































