நாம் தினமும் உணவில் கேரட்டை சேர்த்து கொள்வது அவசியமாகிறது. தற்போது கேரட்டில் சுவையான சூப் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கேரட் – 6
தக்காளி – 1
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – சிறிது
வெண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
கேரட்டை நன்றாக கழுவி துருவி கொள்ளுங்கள். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி மற்றும் கேரட்டை வேக வைத்துக் கொண்டு, இரண்டையும் மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் வெண்ணெயை போட்டு உருகியதும், பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட் மற்றும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதில் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். சூப்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும். டயடில் இருப்பவர்களுக்கு இந்த சூப் நல்ல பலனை தரும்.








































