Loading...
யாழ்ப்பாணம், பலாலி கடற்பகுதி வழியாக இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற 13 பேரையும் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை தில்லைநகரில் இருந்து பலாலி பகுதிக்கு வந்து பின்னர் இரண்டு படகுகளை பயன்படுத்தி பலாலி கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading...
பலாலி கடற்பரப்பில் பயணித்த வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு படகுகள் பலாலி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் மற்றும் பலாலி பகுதியைச் சேர்ந்த படகு உரிமையாளர்கள் இருவர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading...








































