பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் விழா கோலாகலமாக நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இரவு அம்பாள் வீதி உலா நடக்கிறது.
9-ந்தேதி காலை பூந்தேர் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தேர் தேரோட்டம், 12-ந்தேதி காலை தீர்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
13-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ந்தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ந்தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சர்வேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜ், மோகன், ரமேஷ், சுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.