Loading...
நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
உள்ளூராட்சிறத் தேர்தலுக்காக கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Loading...
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் அது தாமதமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிதிப் பிரச்சினை காரணமாக தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சம் கூறியுள்ளது.
Loading...