நேற்று 690 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 596,347 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 687 பேர் புத்தாண்டு கோவிட்-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த மூன்று நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
12,926 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 161 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,210 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று சந்தேகத்தில் 1,835 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 14 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 15,211 ஆக அதிகரித்துள்ளது.








































