ஆப்பிள் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பழமாகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகம் சாப்பிடப்படும் பழமாக ஆப்பிள் உள்ளது. அதன் தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளின் காரணமாக, இது ஒரு மேஜிகல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் போதுமான அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளன.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சில விசேஷ கூறுகள் ஆப்பிளில் (Apple) காணப்படுகின்றன. இவை உடலில் புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கின்றன. சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைப்பதில் ஆப்பிள் நன்மை பயக்கும். மேலும், இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.
உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங்கின் கருத்துப்படி, பெக்டின் போன்ற நன்மை பயக்கும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. ஆப்பிளில் வைட்டமின் சி சீரான அளவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்தும் போரானும் இதில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்தால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும்.








































