இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியதன் பின்னர், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதைடுத்து, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மேலும் சிலரும் நோய்வாய்ப்பட்டுள்ளதை அறிந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் இன்று வடக்கில் நடைபெறும் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.








































