Loading...
மன்னார் பெரிய பாலம் பிரதான சோதனைச் சாவடி அருகில் இன்று (12) காலை 6 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
குளிர்பானப் பொருட்களை மன்னாருக்கு ஏற்றி வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது, மாந்தை மேற்கு பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் மோதியுள்ளது.
Loading...
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்து, வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Loading...








































