Loading...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு 165 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
Loading...
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 164ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக, ஜோஷ் இங்லிஸ் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இந்நிலையில், இலங்கை அணி 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.
Loading...








































