முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு உள்ளூராட்சி பிரதேசங்களிலும் உள்ள சமூக நலன் பேணும் அமைப்புகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் இணைந்து இந்த மாற்றத்திற்கான பாதையை வடிவமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் ஊடுருவும் சமூக விரோத சக்திகளின் தொல்லைகளிலிருந்து தமது பிரதேசம் காப்பாற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பெரும் தேசிய அரசியலில் பங்காளிகளாக இருந்து அரசாங்கங்களை பலப்படுத்துவதற்கும் காப்பாற்றுவதற்கும் பேரம்பேசும் சக்தியை காவு கொடுத்து ஏமாந்த வரலாறு இனி புதைக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.








































