ரஷ்ய படையினரின் எறிகணை தாக்குதலில் உக்ரைனில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
AFP செய்தி முகவரமைப்பின் 32 வயதான வீடியோ பத்திரிகையாளர் அர்மான் சோல்டின், கிழக்கு உக்ரைனில் செவ்வாயன்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார்.
உயிரிழந்த பத்திரிக்கையாளருடன் நான்கு சக ஊழியர்கள் இருந்த நிலையில் ஷெல் தாக்குதலின் போது அவர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இருந்ததால் தப்பிக் கொண்டனர்.
உக்ரைனில் கொல்லப்பட்ட 11 வது ஊடகவியலாளர்
AFP, பத்திரிக்கையாளர் சோல்டினின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்ததோடு அவரின் இழப்புக்கு இரங்கலையும் தெரிவித்தது.
பத்திரிகையாளர் 2015 இல் பயிற்சியாளராகச் சேர்ந்தார், பின்னர் அதன் லண்டன் பணியகத்தில் இணைந்தார்.
எல்லைகளற்ற நிருபர்களின் கூற்றுப்படி, பெப்ரவரி 24, 2022 அன்று ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட 11 வது ஊடகவியலாளர் அர்மான் சோல்டின் ஆவார்.
கடந்தமாதம் இத்தாலிய ஊடகவியலாளர் ஒருவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.