ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு கிலோகிராம் ஒன்றிற்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உரிமக் கட்டணம் தேயிலை ஏற்றுமதி வரி மற்றும் கட்டுப்பாட்டு ஆணை, 2023 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் நேரத்தில் இந்த உரிமக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள்
மேலும் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதியாளரும் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்றுமதி உத்தரவை நிறைவேற்ற முடியாவிட்டால், ஏற்றுமதியாளர் ஒருவருக்கு இந்த உரிமக் கட்டணத்தை மீட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
அத்துடன்,தேயிலை ஏற்றுமதியில் வசூலிக்கப்படும் இந்த உரிமக் கட்டணம் தேயிலை வாரியச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மூலதன நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.