கடந்த 91 நாட்களாக பிக்பாஸ் வீட்டை சுற்றிவந்த ரவீனா வெளியேறிய பின்னர் உருக்கமான பதிவொன்றை பிக்பாஸ் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்திய பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை முடித்து இறுதி கட்டத்தை அடைந்து இருக்கிறது.
குறித்த சீசனில் பவா செல்லதுரை, பூர்ணிமா, ரவீனா,, ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, , விஜய் ,கூல் சுரேஷ், உள்ளிட்டோர் பங்கு கொண்டுள்ளனர்.
தற்போது ஜோவிகா,பவா,வினுஷா,சரவணா விக்ரம் மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, , அன்னயா, கூல் சுரேஷ், , நிக்சன், ரவீனா ஆகியோர் வீட் டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
மேலும் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர். வெளியேறிய பின்னர் அவர் மீதுள்ள அனைத்தை சர்ச்சைகளுக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதை நான் மனசார ஏத்துக்குறேன்..
அதாவது, மணி – ரவீனா ஆகிய இருவரும் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றித்திரிவது குடும்பத்தினர் உட்பட ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திஇருக்கின்றது.
விளையாட சென்ற இடத்தில் இவர்களின் காதல் லீலைகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவாக மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
இவ் அனைத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “ முதலாவது நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் இயன்றவரை கடந்த 91 நாட்கள் உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்தேன் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி குறித்து அனுபவத்தை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது.
மேலும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது வாழ்க்கையில் மாற்றம் ஒரு அனுபவமாக தான் எனக்கு இருந்தது” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், ரவீனாவின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.