Loading...
நாடளாவிய ரீதியில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இவர்கள் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த வாரம் 590 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...
இவர்களை வைத்தியர் பற்றாக்குறை காணப்படும் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.
கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.
Loading...