குஜராத் மாநிலம், கோக்னி கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பிராத்தனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்குள்ள பாதரியார் அந்த சிறுமியுடன் நட்பாக பழகி வருகிறார்.
இந்நிலையில், இந்த சிறுமியை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அந்த பாதரியாரின் மனைவி செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோக்களை காட்டி மிரட்டிவந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவரின் மிரட்டல் அதிகரிக்க சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பாரதியாரையும் அவர்து மனைவியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.