கம்பஹாவில் நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டிற்கு வந்த அநுரகுமார திசநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டை தாக்குதல் நடத்த வந்த இருவர், அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு நிட்டம்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முட்டை தாக்குதலின் அனைத்து விவரங்களையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பலம் வாய்ந்த அமைச்சர் மற்றும் பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் பெயர்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவர்கள் தங்களுக்கு ரூ.1000 சம்பளம் வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், முட்டை தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.








































