அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முகநூல் பக்கம் இன்று பிற்பகல் முதல் ஹெக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வரவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடிய விரைவில் முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வர முடியும்
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் மற்றும் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முகநூல் பக்கத்திற்கு பிரவேசிக்கும் பயனர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியத்திற்காக வருந்துவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூடிய விரைவில் முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சின்த்தக்க தெரிவித்துள்ளார்.








































