தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு ஆபாசமான காணொளிகளை தனது கைத்தொலைபேசியில் காண்பித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரத்தினபுரி ஒபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைபேசியில் ஆபாச படம்
ஆசிரியரின் இந்த சம்பவம் தொடர்பில் மாணவிகள் தமது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் கைத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெயியந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆசிரியரே கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணை
சுமார் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் அவ்வப்போது இந்த ஆபாச காட்சிகளை காண்பிப்பதாக காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.