Loading...
09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (20) மற்றும் நாளை நாடு முழுவதும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Loading...
தட்டம்மை தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற தட்டம்மை நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயல்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...








































