கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (20) காலை கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது.
மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரிய வருகையில், சடலமாக மீட்கப்பட்ட நபரை மது போதையில் இருந்த நிலையில் நேற்று(19) மாலை 7 மணியளவில் மக்கள் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (20) காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அண்மை நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








































