நேற்று இந்தியாவில் லண்டனுக்கு புரப்பட்டு சென்ற விமானம் விபத்துகுள்ளாயது. இதை முன்னரே ஜோதிடர் ஷர்மிஸ்தா கணித்துள்ளார். இதனுடன் சில கணிப்புக்களையும் சேர்த்து கணித்துள்ளார். இதனை மக்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
விமான விபத்து
அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 242 பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இந்த விபத்தில் இருந்து ஒருவரால் மட்டுமே உயிர்தப்பிக்க முடிந்துள்ளது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என்று பதிவிட்டிருந்தார்.
அவர் மிகவும் முக்கியமாக கூறியது இந்த 2025 இல் விமான விபத்து நிச்சயம் ஏற்படும் என்று கணித்துள்ளார். அதுவும் இதுவரை நடந்த விமான விபத்துக்களில் இது மிகவும் மோசமாக இருக்கும் என கூறி இருந்தார்.

இவர் கடந்த 5ம் தேதி இதனை கணித்துள்ளார். இது 12ம் திகதி நடந்துள்ளது. இந்த ஜோதிடரின் பெயர் ஷர்மிஸ்தா வாகும். இந்த கணிப்புடன் இன்னும் சில விடயங்களை சேர்த்து கணித்துள்ளார்.
அதாவது பொருளாதார ரீதியான வீழ்ச்சி வளர்ச்சி, தங்கம் வெள்ளி நிலவரம் குறித்த பல விஷயங்களைப் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் கணிப்புக்களை பதிவிட்டு வருகிறார்.
இவற்றை கூறிவிட்டு குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது இவை நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இது தவிர இவர் டாடா குழுமம் ஹைதராபாத்தில் ரஃபேல் ஜெட் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்கும் என்றும், அடுத்த இரண்டு
ஆண்டுகளால் வின்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார். இவை நடக்குமா நடக்காதா என பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.









































