Loading...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு களை கட்டுப்படுத்தும் வகையில் பொலஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விசேட நடவடிக்கையின் போதே குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Loading...
இதன்படி மீட்கப்பட்ட வாகனங்களையும், கைதுசெய்யப்பட்ட நபர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அக்கராயன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
Loading...








































