- நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் அதிக பட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாக சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதாவது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.
இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆனால் நியூசிலாந்து அணி 56 ரன்கள் எடுத்த போது பிரேஸ்வெல் அவுட் ஆனார். அடுத்து பிலிப்ஸ் – சாட்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பாண்ட்யா பிரித்தார்.
சாட்னர் 27 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் நீண்ட நேரம் ஆடி கொண்டிருந்த பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பெர்குசனும் அவர் பந்தில் வெளியேறினார். கடைசியில் டிக்னர் 2 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.