காட்டெருமை ஒன்று தனது குட்டியை சுற்றி வளைத்த சிங்கங்களை விரட்டியடித்து தனது தாய்பாசத்தை வெளிப்படுத்தும் காட்சி வைரலாகி வருகின்றது.
காட்டெருமையின் தாய் பாசம்
பொதுவாக தாய்பாசம் என்று வந்துவிட்டால் அது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமல்ல… ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் தான் என்பதை நிரூபித்துள்ளது இங்கு ஒரு காட்சி.
ஆம் தாய்பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான். இங்கு காட்டெருமை குட்டியை சிங்க கூட்டங்கள் சுற்றி வளைத்துள்ளது.
முதலில் கவனிக்காத எருமை பின்பு பயங்கரமாக சண்டையிடுகின்றது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐந்து சிங்கங்கள் சூழ்ந்து கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து எப்படி தப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இறுதி தருணத்தில் சக காட்டெருமைகள் வந்து துரத்தி, கன்றுகுட்டியை காப்பாற்றிய தருணம் அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
No language can express the power and beauty and heroism of a mother’s love…🫴🏻🥺🧿 pic.twitter.com/cDDtTxvtci
— Masha26 (@MashaSk26) April 10, 2025